சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நனவிலும் கனவிலும், நாளும், தன்
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qYLdNt2Nl0k

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.021   நனவிலும் கனவிலும், நாளும், தன்  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) ; (திருத்தலம் அருள்தரு சர்வாலங்கிரதமின்னம்மை உடனுறை அருள்மிகு சற்குணலிங்கேசுவரர் திருவடிகள் போற்றி )
நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்-
கனைகடல் வையகம் தொழு கருக்கு
அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே!

[1]
வேதியன், விடை உடை விமலன், ஒன்னலர்
மூதெயில் எரி எழ முனிந்த முக்கணன்,
காது இயல் குழையினன், கருக்குடி அமர்
ஆதியை, அடி தொழ அல்லல் இல்லையே.

[2]
மஞ்சு உறு பொழில் வளம் மலி கருக்கு
நஞ்சு உறு திருமிடறு உடைய நாதனார்
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே,
வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ?

[3]
ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கான் இடை ஆடலான் பயில் கருக்குடிக்
கோன் உயர் கோயிலை வணங்கி, வைகலும்,
வானவர் தொழு கழல் வாழ்த்தி, வாழ்மினே!

[4]
சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை;
கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலி
பாடுவர், இசை; பறை கொட்ட, நட்டி
ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே!

[5]
இன்பு உடையார், இசை வீணை; பூண் அரா,
என்பு, உடையார்; எழில் மேனிமேல் எரி
முன்பு உடையார்; முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்பு உடையார் கருக்குடி எம் அண்ணலே!

[6]
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்;
சீலமும் உடையவர்; திருக்கருக்கு
சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே!

[7]
எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை
முறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ், கருக்கு
அறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே.

[8]
பூ மனும் திசை முகன் தானும், பொற்பு அமர்
வாமனன், அறிகிலா வண்ணம் ஓங்கு எரி-
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்கு
நா மனனினில் வர நினைதல் நன்மையே.

[9]
சாக்கியர், சமண் படு கையர், பொய்ம்மொழி
ஆக்கிய உரை கொளேல்! அருந் திரு(ந்) நமக்கு
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடிப்
பூக் கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே!

[10]
கானலில் விரைமலர் விம்மு காழியான்,
வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளி
ஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லிய
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list