சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.021
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நனவிலும் கனவிலும், நாளும், தன் பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=qYLdNt2Nl0k |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.021  
நனவிலும் கனவிலும், நாளும், தன்
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) ; (திருத்தலம் அருள்தரு சர்வாலங்கிரதமின்னம்மை உடனுறை அருள்மிகு சற்குணலிங்கேசுவரர் திருவடிகள் போற்றி )
நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்- கனைகடல் வையகம் தொழு கருக்கு அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே! | [1] |
வேதியன், விடை உடை விமலன், ஒன்னலர் மூதெயில் எரி எழ முனிந்த முக்கணன், காது இயல் குழையினன், கருக்குடி அமர் ஆதியை, அடி தொழ அல்லல் இல்லையே. | [2] |
மஞ்சு உறு பொழில் வளம் மலி கருக்கு நஞ்சு உறு திருமிடறு உடைய நாதனார் அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே, வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ? | [3] |
ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் கான் இடை ஆடலான் பயில் கருக்குடிக் கோன் உயர் கோயிலை வணங்கி, வைகலும், வானவர் தொழு கழல் வாழ்த்தி, வாழ்மினே! | [4] |
சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை; கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலி பாடுவர், இசை; பறை கொட்ட, நட்டி ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே! | [5] |
இன்பு உடையார், இசை வீணை; பூண் அரா, என்பு, உடையார்; எழில் மேனிமேல் எரி முன்பு உடையார்; முதல் ஏத்தும் அன்பருக்கு அன்பு உடையார் கருக்குடி எம் அண்ணலே! | [6] |
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்; சீலமும் உடையவர்; திருக்கருக்கு சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே! | [7] |
எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை முறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார் கறை படு பொழில் மதி தவழ், கருக்கு அறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே. | [8] |
பூ மனும் திசை முகன் தானும், பொற்பு அமர் வாமனன், அறிகிலா வண்ணம் ஓங்கு எரி- ஆம் என உயர்ந்தவன் அணி கருக்கு நா மனனினில் வர நினைதல் நன்மையே. | [9] |
சாக்கியர், சமண் படு கையர், பொய்ம்மொழி ஆக்கிய உரை கொளேல்! அருந் திரு(ந்) நமக்கு ஆக்கிய அரன் உறை அணி கருக்குடிப் பூக் கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே! | [10] |
கானலில் விரைமலர் விம்மு காழியான், வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளி ஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லிய ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே. | [11] |